தமிழகம்

மதுரை புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் லேசான மழை; காற்றில் மரம் சாய்ந்து கார் மீது விழுந்ததில் மரத்தை வெட்டி காரை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்

59views
மதுரை புறநகர் பகுதிகளான திருப்பரங்குன்றம், அவனியாபுரம், திருநகர் ஆகிய பகுதிகளில் இன்று மாலை முதல் பலத்த காற்றுடன் லேசான சாரல் மழை பெய்தது. வெப்ப சலனம் காரணமாக பெய்த இந்த மாலையால் தற்போது புறநகர் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
பலத்த காற்றுடன் மழை பெய்ததில் மதுரை திருநகர் முதல் ஸ்டாப் அருகே உள்ள பாண்டியன் நகரில் இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான புதிய கார் மீது பெரிய ராட்சத மரம் சாய்ந்ததில் காரில் இருந்த கண்ணாடிகள் நொறுங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் நிறைய அலுவலர் உதயகுமார் தலை மேலான தீயணைப்பு துறையினர் மூன்று மணி நேரம் போராடி காருக்கு மேலும் சேதாரம் ஆகாமல் மரத்தை மட்டும் வெட்டி மரத்துக்கு அடியில் சிக்கியிருந்த காரை அகற்றினர். இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!