தமிழகம்

பல கோடி ரூபாயை ஏமாற்றிய காட்பாடி ஐஎப்எஸ் நிதி நிறுவன ஏஜெண்ட் தூக்கிட்டு தற்கொலை

69views
வேலூர் மாவட்டம் காட்பாடி வி. ஜி.ராவ் நகரில் ஐஎப்எஸ் என்ற நிதிநிறுவனம் பொதுமக்களிடம் அதிக வட்டிக்கு ஆசைகாட்டி பல ஆயிரம் கோடி ரூபாயை சுருட்டிகொண்டு அதன் அதிபர்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர்.  இதில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் கல்லேரி பகுதியை சேர்ந்த பிரசாத் (38) என்ற பொறியாளர் தனது பணம் மற்றும் உறவினர் பணம் என ரூபாய் 24 லட்சத்தை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, அதில் ஏஜெண்டாகி செலுத்தி இருந்தார்.
பணம் கொடுத்தவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுக்கவே, மன உளைச்சல் அடைந்து தனது கல்லேரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  தனது இறப்புக்கு பணமோசடியே காரணம் என கடிதம் எழுதிவைத்து உள்ளார். அதை குடியாத்தம் காவல்துறை கைப்பற்றி மேற்கொண்டு விசாரணை செய்துவருகின்றனர்.  இறந்த பிரசாத்துக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ள்ளனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!