தமிழகம்

நாளை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்கள் அச்சமின்றி தேர்வெழுத ராமநாதபுரம் ஆட்சியர் அறிவுரை

44views
ராமநாதபுரம்  மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்  தெரிவித்ததாவது,  ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை ( ஏப்.6) நடைபெறுகிறது. இத்தேர்வில் 8, 359 மாணவர்கள, 8, 480 மாணவிகள், 491தனி தேர்வர், மாற்றுத்திறன் மாணவ, மாணவியர் 165 பேர் என 17 ஆயித்து 501 பேர், 84 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
இத்தேர்வு பணியில் ஆயிரத்து 264 கண்காணிப்பாளர்கள், முதன்மை  கண்காணிப்பாளர் 84 பேர், துறை அலுவலர் 84 பேர், 148 பணியாளர்கள் கொண்ட  பறக்கும் படை குழு ஈடுபட உள்ளனர். மாவட்ட கல்வி அலுவலர்கள்,  முதன்மை கல்வி அலுவலர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வர்.  ஒவ்வொரு மையத்திலும் காவல் துறை மூலம் உரிய பாதுகாப்பு பணி  மேற்கொள்வர். அனைத்து தேர்வு மையத்திலும் தடையில்லா மின்சாரம், குடிநீர், உட்கட்டமைப்பு வசதி  தயாராக உள்ளது.
மாணவ, மாணவியர் அச்சமின்றி தேர்வு எழுதி அதிக மதிப்பெண்  பெற்று வெற்றி பெற வேண்டும் என கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் செய்தி குறிப்பில்  தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் : காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!