தமிழகம்

நானோதொழில்நுட்பத்தில் நவீன கால ஆராய்ச்சிகள் குறித்த கருத்தரங்கு

21views
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, இயற்பியல் துறை சார்பாக 18.09.2024 அன்று நானோ தொழில்நுட்பத்தில் நவீன கால ஆரய்ச்சிகள் குறித்த பன்னாட்டு கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி துணைமுதல்வர் மற்றும் துறைத்தலைவர் முஸ்தாக் அகமது கான் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்புவிருந்தினர்களாக தஞ்சாவூர், A.V.V.M. ஸ்ரீ புஷ்பம் கல்லூரி, இயற்பியல் துறைத்தலைவர், இணைப்பேராசிரியர் ரவிசந்திரன் மற்றும் மேற்கு ஆப்ரிக்கா, லோமி-டோகோ பல்கலைக்கழகம், இணைப்பேராசிரியர் பெனிட்டோ மசபைலோ ஆகியோர் கலந்துகொண்டு நவீன அறிவியல் வளர்ச்சியில் நானோ தொழில்நுட்பத்தின் பங்கு குறித்து பேசினர்.
நிகழ்வில் இயற்பியல் மற்றும் வேதியியல் துறை மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை துறைசார் பேராசிரியர்கள் செய்திருந்தனர். இறுதியாக கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர், உதவிப்பேராசிரியை ஹெலன் நன்றி கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!