தமிழகம்

ஆசிரியர் தின சிறப்பு பட்டிமன்றம்

57views
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் ஆசிரியர் தினம் முன்னிட்டு 05.09.2024 அன்று சிறப்பு ஆசிரியர் தின பட்டிமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் வரவேற்றார். சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் சபினுல்லாகான் தலைமையுரையாற்றினார். மனிதன் மகிழ்ச்சியாக வாழ்ந்த காலம் – வாட்ஸப் காலமா? வயல்வெளி காலமா? என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. வயல்வெளி காலமே என்னும் தலைப்பில் கோவை மஞ்சுநாதன் மற்றும் பேராசிரியர் அபு ஆகியோரும், வாட்ஸப் காலமே என்னும் தலைப்பில் கௌதமி மற்றும் மேனகா ஆகியோரும் பேசினர். பட்டிமன்ற நடுவராக தேவகோட்டை மகாராஜன் கலந்துகொண்டு பட்டிமன்றத்தை ஒருங்கிணைத்தார். இறுதியாக கல்லூரி துணை முதல்வர் முஸ்தாக் அகமது கான் நன்றி கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!