தமிழகம்

மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்து – எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

32views
மதுரை தெற்கு மாவட்டம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மணிப்பூரில் கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இன்று காலை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமை தாங்கினார்.  கட்சியினுடைய மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது வரவேற்புரையாற்றினார்.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வெ. கனியமுதன் , மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிஸ்மில்லா கான், எஸ்டிபிஐ கட்சி வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன், விமான் இந்தியா மூவ்மெண்ட் மாநிலத் தலைவர் பாத்திமா கனி மற்றும் கிறிஸ்தவ தலைவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.
இறுதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் பஹார்தீன் நன்றியுரை கூறினார்.  நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து தங்களின் கண்டன குரல்களை பதிவு செய்து கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!