தமிழகம்

தைப்பொங்கலுக்கு செங்கரும்பு வழங்க வேண்டும் என்று எடப்பாடியார் எழுப்பிய உரிமைக் குரலுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று விவசாயிகள் பாராட்டுகின்றனர் – சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

79views
மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் உலக நன்மைக்காக ஸ்ரீ ஆதிருத்ரம் மஹாயக்ஞம் நடைபெற்று வருகிறது.கமிட்டி தலைவர் அருணாச்சல வாத்யார், சேது வாத்யார், ஸ்ரீதர் வாத்யார், சேது வெங்கட்ராமன் வாத்யார், சந்திரசேகரன் வாத்யார், சத்யநாராயணன் வாத்யார் உள்ளிட்ட 170 பேர் மேற்பட்ட வேதவிற்பனர்கள் பங்கேற்றனர்.
25 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி வருகின்ற 1ம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்று வேத விற்பனர்களுக்கு 51 சமத்துவ சமுதாயம் திருமண அழைப்பிதழை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி உதயகுமார் மற்றும் அவரது மகள் யு.பிரியதர்ஷினி தாயார் மீனாள் ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மதுரை அட்சயபாத்திர நிறுவனர் நெல்லை பாலு, மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஏ.கே.பி. சிவசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்
ஆர். பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
மீனாட்சி சொக்கநாதர் திருவருளாலே ஒவ்வொரு ஆண்டும்  ஸ்ரீ ஆதிருத்ரம் மஹாயக்ஞம் மதுரை லட்சுமி சுந்தரம் ஆடிட்டோரியத்தில் தொடர்ச்சியாக 28 ஆண்டுகள் உலக நன்மைக்காகவும், உலக மக்களுக்கு எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டும், பாவங்கள் எல்லாம் போக வேண்டும் என்றும், எல்லோருக்கும் இறைவனுடைய அருள் கிடைக்க வேண்டும். என்கிற அந்த பிரார்த்தனையோடு இந்த ஆதிருத்ரம் மஹாயக்ஞம் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் வருகிற பிப்ரவரி 23ஆம் தேதி சமத்துவ சமுதாய திருமண விழாவிற்காக அழைப்புகளை, இந்த வேத விற்பனர்கள்களுக்கும்,வேத வாத்யார்களுக்கு வழங்குவதற்காக அழைப்புகளை கொடுப்பதற்காக, இந்த நிகழ்விலே பங்கேற்றுவது எங்களுக்கு உள்ளபடியே மகிழ்ச்சி அளிக்கிறது.
எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டியும், எல்லா மக்களும் பாதுகாப்பாகவும், எல்லா மக்களும் சவுகரியத்தோடு, எல்லா வளங்களையும், எல்லா செல்வங்களையும் பெற்று, அமைதி, வளம்,வளர்ச்சி என்கிற அம்மாவின் தாரக மந்திரத்தோடு, இந்த நாடு வளர வேண்டும், வளர்ச்சி அடைய வேண்டும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் மீண்டும் தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் அம்மாவின் ஆட்சி மலர வேண்டும் என்பதை வேண்டுதலாக வைத்துள்ளேன்.
அதேபோன்று ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசினுடைய சட்ட ஆணையம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கருத்துக்களை கேட்கும் விதமாக,
அனைத்திந்தியஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச்செயலாளர் எடப்பாடியார் என்று குறிப்பிட்டு, சட்ட ஆணையத்தின் தலைவரும், நீதிபதியுமான ருதுராஜ் கருத்து கேட்கும் கடிதம் அனுப்பி இருப்பது, ஒன்னரை கோடி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களுக்கு இன்றைய நாளிலே ,மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டு இருக்கிறது மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், இன்றைக்கு தூற்றுவார் தூற்றட்டும், போற்றுவார் போற்றட்டும் கடமையை செய் என்பதை போல், மக்களுக்கான கடமை ஆற்றுவதிலே, எடப்பாடியார் வெற்றி பெற்றுவருகிறார்.
பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாத குறித்து, முதல் முதலாக உரிமைக்குரல் எழுப்பி, மக்களுக்கு கரும்பை வழங்குவதோடு, அரசை நம்பி செங்கரும்பை விதைத்திருக்கிற அந்த விவசாயிகள் வாழ்விலே ஒளி ஏற்றுகின்ற வகையிலே அரசே கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், 5,000 ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என்று மக்களுக்காக உரிமைக்குரல் எழுப்பியவர் எடப்பாடியார்.
விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்துகிற போது, அவர்களுக்கு ஆதரவாக, பாதுகாவலனாக,விவசாயிகளின் குரலாக அந்த விவசாயினுடைய நம்பிக்கையாக, விவசாயினுடைய எதிர்காலமாக நின்று ,அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து கோரிக்கை வைத்ததின் விளைவாக, முதலமைச்சர் பொங்கல் பரிசு தொகுப்போடு கரும்பு சேர்க்கப்படும் என்கிறஅறிவிப்பைஅறிவித்தார். எடப்பாடியார் மக்களுடைய பிரச்சனைகளுக்காக, மக்களுடைய கோரிக்கைகளுக்காக, மக்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதில் வெற்றி மேல் வெற்றி கிடைத்துள்ளது.
எடப்பாடியார் மக்கள் பணிக்கு கிடைத்துள்ள வெற்றியை இன்றைக்கு விவசாயிகளும், பொதுமக்களும் மணமகிழ்ச்சியோடு எடப்பாடியாருக்கு நன்றி தெரிவிக்கிற காட்சி நம் உள்ளத்தை நெகிழச் செய்கிறது.  பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு நிச்சயமாக இடம்பெற வேண்டும், கருப்பில்லாமல் பொங்கல் இல்லை, என்பது நாம் காலங்காலமாக கடைபிடித்து வருகிற நடைமுறையில் கருப்பில்லாத பொங்கலை நினைத்து கூட பார்க்க முடியாது.
பிரதான எதிர்க்கட்சியாக ஒவ்வொரு நாளும், மக்களுடைய கோரிக்கைக்காக களத்தில் நின்று போராடி வருகிறார் எடப்பாடியார். சொத்து வரி உயர்வு, மின்சாரக்கட்டணஉயர்வு, சட்ட ஒழுங்கு சீரழிவு என்று தொடர்ந்து போர்குரல் எழுப்பி வருகிறார்.  சட்ட ஆணையத்தின் தலைவரும், நீதிபதியுமான ருதுராஜ் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் என்று குறிப்பிட்டு கருத்து கேட்கும் கடிதம் அனுப்பி உள்ளது இதை எதைகுறிப்பீடுகிறது என்றால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று சொன்னால் மன்னாதி மன்னன், மக்கள் திலகம், புரட்சித்தலைவர் தொடங்கிய இந்த இயக்கம்,  புரட்சித்தலைவி அம்மா வளர்த்தெடுத்து இந்தியாவிலே மூன்றாவது மாபெரும் மக்கள் இயக்கமாக உருவாக்கிய இந்த இயக்கம், எடப்பாடியார் தலைமையிலே மக்கள் பணியாற்றி, இன்றைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக, பிரதான எதிர்க்கட்சியாக மிக விரைவிலே ஒட்டுமொத்த தமிழக மக்களின் நம்பிக்கை பெற்று எடப்பாடியார் முதலமைச்சராக வருவார். இந்த தாய் தமிழ்நாட்டிற்கு அந்த நாளே பொன்னாள் என்று எல்லோரும் நம்பிக்கையோடு எதிர்பார்த்து இருக்கிற அந்த பொன்னான நாளுக்கு பிள்ளையார் சுழி போட்டு வழி வகுத்து கொடுத்திருக்கிற அறிவிப்பாகத்தான்உள்ளது.
ஏற்கனவே ஜி20 மாநாட்டிலே வந்த அந்த அழைப்பு, அன்றைக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஆளுங்களும்கட்சிகளுக்கு, எதிர்க்கட்சிகளுக்கு அழைக்கிறபோது தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச் செயலாளராக எடப்பாடியாருக்கு அழைப்பு கொடுத்தார்கள்.  அதை தொடர்ந்து, இன்றைக்கு மத்திய சட்ட ஆணையம் பொதுச் செயலாளர் என்று ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிற அந்த கருத்து கேட்கின்ற அந்த கடிதம் இன்றைக்கு பொதுச் செயலாளர் என்று எடப்பாடியாருக்கு கொடுத்திருப்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றால் புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் என்ற அந்த திராவிட இயக்கத்தினுடைய பாரம்பரியத்தினுடைய மூன்றாவது தலைமுறையாக எடப்பாடியார் திகழ்ந்து ,அதிமுக சார்பில் இன்றைக்கு மக்களை காத்து மகத்தான சேவை ஆட்சி வருகிறார்கள் என்பது நிருபனமாய் இருக்கிறது என்று கூறினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!