தமிழகம்

உசிலம்பட்டியில் பணத்துடன் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பியூட்டி பார்லர் சென்ற பெண்ணிடம் நூதன முறையில் ரூ5லட்சத்து 40ஆயிரம் பணம் திருட்டு. போலிசார் விசாரணை.

255views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிபட்டியைச் சேர்ந்தவர் பாண்டி.பால் பண்னை வைத்துள்ளார்.இவருடைய மனைவி மேகலா. இவர் இன்று மதுரை ரோட்டிலுள்ள இந்தியன் வங்கி கிளைக்குச் சென்று அவசரத் தேவைக்காக தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ5லட்சத்து 40 ஆயிரம் பணம் எடுத்துள்ளார்.பணத்தை தனது ஸ்கூட்டி டிக்கியில் வைத்து விட்டு தேவர் சிலை அருகே வண்டிப்பேட்டையுள்ள சங்கீதா பியூட்டி பார்லர் என்ற அழகுநிலையத்திற்குச் சென்றுள்ளார்.வண்டியை வெளியே நிறுத்தி விட்டு உள்ளே சென்று விட்டு திரும்ப வந்த போது வண்டியின் சீட் பகுதி உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அவர் இது குறித்து உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமாராவை ஆய்வு செய்ததில் அச்சமயத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருவர் இருசக்கர வாகனத்தில் சென்றது தெரிய வந்தது.இவர்கள்தான் மேகலாவின் .இருசக்கர வாகனம் அருகே நின்று கொண்டிருந்ததாக அருகிலிருந்தவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து போலிசாhர் விசாரணை நடத்தி வருகின்றனர்.உசிலம்பட்டியின் ஜன நெருக்கடி மிகுந்த பகுதியில் பணம் திருடு போயிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!