தமிழகம்

மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தனி ஆளாக செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது

77views
மதுரை புது விளாங்குடி பகுதியில் சேர்ந்த முத்துமாரி( வயது 32) என்பவர் மதுரை மாவட்ட கல்வி அலுவலகத்தில் தற்காலிக அக்கவுண்டண்டாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்லூர் எல்ஐசி மேம்பாலத்தில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அவரை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் முத்துமாரியின் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் மதிப்பிலான தாலிச் செயினை பறித்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று உள்ளார். உடனே சம்பவம் குறித்து மதுரை செல்லூர் காவல் நிலையத்தில் முத்துமாரி புகார் அளித்துள்ளார்.
இதனை அடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் தொகுப்புகள் ஆய்வு செய்யபட்டது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள மேலக்குயில்குடி பகுதியைச் சேர்ந்த சிவப்பாண்டி என்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து சிவாபாண்டியை பிடித்து விசாரணை நடத்திய போலீசார் அவரிடம் இருந்து 5 பவுன் தாலி செயனையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!