தமிழகம்

மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் தொல்மரபியல் ஆய்வுகூடம், நுண் உயிரியல் ஆய்வுகூடம் அமெரிக்க, லக்னோ பல்கலைகழக கலந்தாய்வு ஆய்வக வசதியுடன் ரூபாய் 3.3 கோடி அமைக்கப்பட்டுள்ளது

122views
தமிழக நிதியமைச்சர் மத்திய தமிழக அரசின் நிதி பங்களிப்புடன் துவக்கிவைத்தார்.
மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் 3.3 கோடி மதிப்பில் தொல் மரபியல் துறை மற்றும் ரூசா நிதி உதவியுடன்  மரபியல் ஆய்வகம் மற்றும். தொல்லியல் உயிரியல் ஆய்வகம் தொடக்க விழா நடைபெற்றது.
விழாவிற்கு பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் குமார் தலைமை வகித்தார்.  .பல்கலை பதிவாளர் சிவகுமார் வரவேற்புரை கூறினார்.

மரபியல் ஆய்வகத்தினை திறந்துவைத்து சிறப்புரையை தமிழக நிதியமைச்சர் P.T.R.தியாகராஜன் கூறும் போது.
பண்டய பழமையை அறிய மிக உயரிய ஆய்வகம் அமைத்த பல்கலை கழகத்திற்கு வாழ்த்துக்கள் எனது தாத்தா PT.ராஜன் மற்றும் மாமா பக்தவச்சலம் சென்னை மாகாண முதல்வராக இருந்தவர்கள் இந்த நிறுவனத்திற்கு பங்கற்றியுள்ளனர்.
உயரியல், நுண் உயிரியல் படிப்புகளின் ஆய்வாகத்தின் மூலம் பண்டைய கலாச்சார, பொருளாதார ,வாழ்வு நிலை விளக்கும். ஆய் வுகள், பழைய மரபுகளை புதிய தலைமுறைத்து எடுத்துரைக்கும்.
ஆராய்ச்சிகளில் இன்றய நிலவரம், பாடநூல்கள் மூலம் வரலாற்றில் இடம் பெறும் என நிதியமைச்சர் PTR தியாகராஜன் கூறினார்.

இந்த ஆய்வகத்தின் மூலம் பண்டைய மனித மரபணு பகுப்பாய்வு, விலங்குகள் மரபணு பகுப்பாய்வு, தாவர மரபணு பகுப்பாய்வுகள் செய்யவும்
பண்டைய நுண் உயிரியல் (Micro biology) துகள்களை ஆய்வு செய்து தற்போது வேகமாக பரவிய கோவிட் 19 போன்ற நோய்களுக்கு ஆய்வின் மூலம் புதிய மருந்துகள் கண்டுபிடிக்கவும் ஆய்வகத்தில் நவீன நுண் உயிரியல் ஆய்வக வசதி உள்ளது.

ஆய்வக மற்றும் பகுப்பாய்வு முடிவுகள் கலந்தாய்வு வசதிகளுக்காக சிகாகோ பல்கலைகழகம், லக்னோ பீர்பால் சஹானி பல்கலை கழகத்துடன் இணைந்து காமராஜர் பல்கலை ஆய்வு மேற்கொள்ளும்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!