தமிழகம்

இரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயில் ஆடிக்கிருத்திகை முன்னிட்டு ஆலோசனை கூட்டம்

72views
வேலூர் அடுத்த இரத்தினகிரியில் உள்ள அருள்மிகு பாலமுருகன் திருக்கோயிலில் வரும் 8 மற்றும் 9 தேதிகளில் ஆடி பரணி, ஆடி கிருத்திகை விழா நடைபெற உள்ளதையொட்டி  திருக்கோயில் மண்டபத்தில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.  கோயில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமை தாங்கினார்.  இராணிப்பேட்டை வருவாய் கோட்டாச்சியர் வினோத்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.  சுகாதாரத்துறை, போக்குவரத்துதுறை, வருவாய்துறை, வட்டார வளர்ச்சி துறை, மின்வாரியம், தீயணைப்பு துறை, உள்ளாட்சி துறையினர் பங்கேற்றனர்.
இந்த துறைகள் எவ்விதம் செயல்பட வேண்டும் என்றும் ஆலோசனை நடத்தப்பட்டது.  கீழ் மின்னல் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி, துணைத்தலைவர் நவமணி, மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம நாட்டாண்மை தாரர்கள் கலந்துகொண்டனர்.  ஏற்பாடுகளை செயல் அலுவலர் சங்கர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!