தமிழகம்

முப்பெரும் விழா

19views
இராமநாதபுரம், செப்.6
இராமநாதபுரம் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் பெரியார், மகாகவி பாரதியார், வ.உ.சி ஆகிய மூன்று தலைவர்களை போற்றும் வகையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்கத்தின் சார்பாக முப்பெரும் விழா மாவட்ட துணைச் செயலாளர் நா.கலையரசன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்டத் துணைச் செயலாளர் ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டச் செயலாளர் வான் தமிழ் இளம்பரிதி துவக்க உரையாற்றினார்.
மாற்று ஊடக மையம் இயக்குனர் ரா.காளீஸ்வரன், மின்துறை பொறியாளர் அமைப்பின் மாநில தலைவர் ரெ.குருவேல், முத்தமிழ் மன்றம் மானுடப்பிரியன் ஆகியோர் மூன்று தலைவர்களை பற்றி உரையாற்றினர். விழாவில் மாவட்ட தலைவர் முத்துலட்சுமி பேராசிரியர் பாலமுருகன் கவிஞர் பொதிகை பாஸ்கரன் கலை இலக்கிய பெருமன்ற தலைவர் சௌந்தர பாண்டியன் கவிஞர் மோகனப்பதியார் ராஜகலைஞன் விஜயராம் ஆகியோர் கலந்து கொண்டார்கள் ரா.முரளிமோகன் நன்றி கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!