தமிழகம்

சென்னை சென்டரல் பயணிகளுக்கு இனி ‘ஈஸி ரூட்’ நெரிசலைக் குறைக்க வருகிறது புதிய சுரங்கபாதை, புறநகர் மெட்ரோ இணைப்பு திட்டம் !!

111views
சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில்நிலையத்தில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் அவர்களுக்கு புதிய திட்டத்தை ரயில்வே நிர்வாகம் அமுல்படுத்தவுள்ளது. அதன்படி புறநகர் ரயில்நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கும் பணியை துவக்கி உள்ளது.
100-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் 400 -க்கும் மேற்பட்ட புறநகர் ரயில்கள் வந்து செல்வதால் லட்சக்கணக்கான பயணிகளுடன் சென்ட்ரல் திக்குமுக்காடுகிறது.  தற்போது உள்ள நிலையில் புறநகர் ரயில் பயணிகள் மெட்ரோ ரயிலை பிடிக்க வேண்டுமானால் கடும் கூட்ட நெரிசலை தாண்டி செல்லவேண்டிய நிலை உள்ளது.
அதேப்போல் விரைவு ரயிலை பிடிக்க வருவோர் கார் பார்கிங் பகுதி மற்றும் டிக்கெட் கவுண்டர் பகுதிக்கு செல்ல கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றன.  இந்த சிக்கலுக்கு தீர்வுகாணும் வகையில் Rail India Technical and Economic Service என்ற நிறுவனம் ட்ரேன் மூலம் கடந்த 28-ம் தேதி ஆய்வு மேற்கொண்டது.
சென்னை சென்ட்ரல், புறநகர், மெட்ரோ பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.  மின்சார ரயிலிருந்து இறங்கும் பயணிகள் மழை, வெய்யிலில் அலையாமல் நேரடியாக பாதுகாப்பாக சுரங்கபாதை வழியாக மெட்ரோ ரயில்நிலையத்தை அடையமுடியும்,  வயதானவர்கள், மாற்றுதிறனாளிகளும் பாதுகாப்பாக செல்லமுடியும்.
விரைவில் திட்டப்பணிகள் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டு பணிகள் துவக்கப்படும்.  இது சென்னை வந்து செல்லும் பயணிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.
தொகுப்பு: கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!