வானொலி நெஞ்சங்கள் பண்பலையின் பாசப்பறவைகள் நற்பணி மன்றத்தின் மூன்றாவது பொதுக்குழு கூட்டம் சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள ரஞ்சனி இல்லம் மாடியில் வைத்து 17.09.2023 ஞாயிறு அன்று அதன் தலைவர் வண்ணார்பேட்டை திரு.ஜெயராஜ் தலைமையில் நடைபெற்றது.
சென்னை வானொலியின் மூத்த நேயர்கள் ஐயப்பன்தாங்கல் திரு.பழனி, திரு.மயிலைபட்டாபி ஆகியோர் முன்னிலை வகித்தனர், பாசப்பறவைகளின் சென்னை மாவட்ட பொறுப்பாளர் திரு.நெல்லை பாரதி வரவேற்புரை மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
சென்னை வானொலியின் மூத்த நேயர்கள் கிண்டி திருமதி நசீமா, திருமதி.ரேவதி மற்றும் நான் மீடியா, நான் எஃப் எம் நிர்வாக இயக்குனர் திரு.ஆர்.ஜே நாகா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பாசப்பறவைகளின் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் பொறுப்பாளர் திருமதி.ஈஸ்வரி அனைவருக்கும் நன்றி கூறினார்.
இந்த கூட்டத்தில் ஆண்டறிக்கை, வரவு செலவு அறிக்கை, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, முக்கிய தீர்மானங்கள் ஆகியவை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலையங்கள் முதன்மை மற்றும் ரெயின்போ பண்பலை அலைவரிசைகள் இணை ஒலிபரப்பு என்று மாற்றம் செய்யப்பட்டு , பிற மொழிகளில் மற்றும் பிற மாநில நிலையங்களின் நிகழ்ச்சிகளை அஞ்சல் செய்யும் நிலையங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு அதிருப்தி தெரிவிக்கும் விதமாக பிரச்சார பாரதியின் டைரக்டர் ஜெனரல் அவர்களுக்கு 1000 கடிதங்கள் எழுதி அனுப்பி வைக்கும் வகையில், முதற்கட்டமாக சென்னையிலிருந்து 100 கடிதங்கள் எழுத பாசப்பறவைகள் நற்பணி மன்றத்தின் சார்பில் அஞ்சல் அட்டைகள் வாங்கிக் கொடுக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நேயர்களுக்கு அனுப்பி வைக்க முகவரியும், அதில் இடம்பெற வேண்டிய கருத்துருவும் இணைத்து, அனைத்து வானொலி நேயர்களும் எழுதி அனுப்பி வைக்குமாறு நிகழ்வில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
பாசப்பறவைகளின் துணைத் தலைவர் குப்புக்குறிச்சி திரு.சுந்தர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களின் பொறுப்பாளர் அல்லிநகரம் திரு .எஸ்.மகாதேவன், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களின் பொறுப்பாளர் திரு.இளஞ்செழியன், அனைத்து மாவட்டங்களின் பெண் நேயர்கள் ஒருங்கிணைப்பாளர் பாவூர்சத்திரம் திருமதி.புஷ்பலதா துரைமணி உள்ளிட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த வானொலி நேயர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு கோவையைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்....
மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் சென்ற பயணிகளுக்கு நீர்,மோர் தர்பூசணி பழங்களை கொண்டு சென்று ஒவ்வொரு பேருந்தாக ஏறி ஏறி கோடை வெயிலுக்கு குளிர்ச்சியா...
RAYRISES என்பது ஆவணப்படங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி, அம்சங்கள் மற்றும் சர்வதேச தயாரிப்புகளுக்காக முழுமையாக காப்பீடு செய்யப்பட்ட முழு-சேவை தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும். தேசிய வர்த்தக இடங்கள்...
கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.