தமிழகம்

பேர்ணாம்பட்டு மலையில் கள்ளச்சாராய ஊரல் அழிப்பு ! 4 பேர் கைது! 3 தப்பி ஓட்டம் !

41views
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு சாத்கர்மலையில் அதிகயளவு கள்ளச்சாராயம் காய்ச்ச படுவது வழக்கம். அதன்மூலம் பேர்ணாம்பட்டு காவல்துறைக்கும், கலால் காவல் துறைக்கும் தொடர்ந்து மாமூல் கொடுக்கப்பட்டு வருவது வேலூர் மாவட்டத்திற்கு தெரியும்.  தமிழ்நாட்டில்கள்ளச்சாராயம் குடித்து 14 பேருக்குமேல் பலியான நிலையில் சுமார் 10 நாட்களுக்கு பிறகே பேர்ணாம்பட்டு மலையில் 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கலால் காவல்துறையினர் ஏறி சாராயம் காய்ச்ச தயாராக வைத்திருத்த 1000 லிட்டர் ஊரல்களை அழித்தனர்.  4 பேர் கைது செய்யப்பட்டு(கள்ளச்சாராயம் விற்ற) 3 பேர் தப்பி ஓடினர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு காவல்துறையினர் அங்கு ரெய்டுக்கு சென்றது சந்தேகத்தை ஏற்படுத்தியதுடன் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுடன் ரகசிய கூட்டு காவல்துறை வைத்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
செய்தியாளர் ; வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!