தமிழகம்

பகுதி நேர ஆசிரியர்கள் சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து மனு அளிப்பு

171views
தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாலை (04.01.2023) கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்ட மன்ற உறுப்பினர் க.சிவகாம சுந்தரி அவர்களை நேரில் சந்தித்து பகுதிநேர ஆசிரியர்கள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்பட்டு காலமுறை ஊதியம் பெறும் வகையில் வருகின்ற சட்டமன்ற கூட்டத்தில் குரல் தர வேண்டும் என்றும், மேலும் மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் பள்ளிக்கல்வி அமைச்சர் பகுதி நேர ஆசிரியர்கள் வாழ்வாதாரம் முன்னேற வழிவகை செய்வதற்கு நீங்கள் உதவவேண்டும் என்று கோரினோம்.
இதில் கலந்து கொண்டவர்கள் மாநில துணைச் செயலாளர் ஆ. மாரியம்மாள், மாவட்டத் தலைவர் மா. முருகானந்தம், மாவட்ட பொருளாளர் ஆ. கலா ராணி மற்றும் கரூர் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
சட்டமன்ற உறுப்பினர் பதில் : சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் உறுதியாக உங்கள் கோரிக்கையை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடமும் பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களிடமும் கடிதம் வாயிலாக எடுத்துக் கூறி உங்களுக்கு நல்ல பலன் கிடைக்க செய்கிறேன் என்று உறுதி அளித்தார். இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று வாழ்த்தி நம்பிக்கை தந்தார் என தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தினர் மகிழ்ச்சியுடன் கூறினர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!