தமிழகம்

பாபநாசம் : ஆசிரியர் கல்வி முடித்த 307 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா : ஜவாஹிருல்லா எம்எல்ஏ பட்டங்கள் வழங்கினார்.

31views
பாபநாசத்தில் உள்ள ஆர்டிபி கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் கல்வி பயின்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
ஆர்டிபி கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் எம்.ஏ. தாவூத் பாட்சா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா அவர்கள் கலந்து கொண்டு 2018-2020, 2019-2021, 2020-2022 ஆகிய கல்வி ஆண்டுகளில் பயின்ற 307 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.  அதைத் தொடர்ந்து பட்டம் பெற்ற ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.  இந்த நிகழ்ச்சியில் ஆர்டிபி கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் திருமதி ராபியா, இயக்குநர் திரு காரல் மார்க்ஸ், செயல் அலுவலர் திரு. அஹமது ராஜா, கல்வியியல் கல்லூரி முதல்வர் திரு. முருகன் உள்பட கல்லூரி பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!