தமிழகம்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா தொடர் இலக்கியக் கூட்டம்

81views
முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தின் சார்பில் 100 கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் இரண்டாவது இலக்கிய கூட்டம் அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தலைமையில் நடைபெற்றது. இதில் கவிஞர் சுப்பையா தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். கலை பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். எழுத்தாளர் நாறும்பூ நாதன், கவிஞர் பிரபு, முனைவர் பொன்.சக்திகலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ‘டாக்டர் கலைஞரின் சொல்வளம்’ எனும் தலைப்பில் முனைவர் கோ. கணபதி சுப்ரமணியன் தனிச் சொற்பொழிவாற்றினார். கவிஞர் முத்துசாமி நன்றி கூறினார். பேராசிரியை பிரியதர்ஷினி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

நூற்றாண்டு விழா கூட்டம் ஒருங்கிணைப்பாளர்களாக கவிஞர்கள் ஜெயபாலன், சக்தி, வேலாயுதம், முத்துவேல், தச்சை மணி, வள்ளி, சேர்மலிங்கம், ஆசிரியர் சிவ செல்வமாரிமுத்து, நல்நூலகர் முத்துகிருஷ்ணன், மீனாட்சிபுரம் நூலகர் அகிலன் முத்துக்குமார், எழுத்தாளர் மு.வெ.ரா மற்றும் கவிஞர் குமாரசாமி, புன்னைச் செழியன் புகைப்படக் கலைஞர் துரைராஜ், சண்முக சுப்பிரமணியன், முனைவர் சரவணகுமார், பேராசிரியைகள் பாத்திமா, ஆறுமுகச்செல்வி, காவலர் மாடசாமி ஆசிரியர் அருணாசலம் பாடகர் சந்திரபாபு, மருத்துவக் கல்லூரி மாணிக்க வாசகம், மேகலிங்கம், ஆசிரியை வீரலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். குலுக்கல் முறையில் இருவருக்கு கலைஞர் பற்றிய நூல் பரிசாக வழங்கப்பட்டது.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!