தமிழகம்

திருமங்கலம் அருகே தமிழக அரசு சார்பில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் முகாமில் ரூபாய் 30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் – மாவட்ட வருவாய் பங்கேற்பு.

60views
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மேல கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருமங்கலம் வட்டார அளவில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சார்ந்த மக்களிடமிருந்து குறை தீர்ப்பு மனுக்கள் பெறப்பட்ட நிலையில் , இதில் ஏற்கனவே மனுக்கள் பெற்றிருந்த கிராம மக்களுக்கு 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு, ரூபாய் 30 லட்சம் செலவில் தமிழக அரசு சார்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் வழங்கினார் .இதில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளி உதவித்தொகை /இலவச வீட்டு மனை பட்டா மற்றும் தையல் இயந்திரங்கள் வேளாண் பொருட்கள், வேளாண் உர மருந்துகள் உள்ளிட்டவைகளை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
முன்னதாக அங்கு வைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு கண்காட்சியினை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் பார்வையிட்டார் . இயற்கை மூலிகைகள், இயற்கை தானிய வகைகள் மற்றும் சுகாதாரத் துறையினர் வைத்திருந்த முன்னெச்சரிக்கை நோய் தடுப்பு முறைகள் ஆகியவற்றை கண்காட்சியில் வைத்திருந்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!