தமிழகம்

நாகர்கோவில் எஸ்.டமுத்துரா குடும்பத்துடன் மருத்துவர். தி.கோ. நாகேந்திரன் அவர்களிடம் நல்லாசி பெற்றார்.

202views
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பி.செந்தில் வேல்முருகன் பி.வி .வளர்மதி தம்பதியரின் மகன் சிறுவன் எஸ்.டமுத்துராவின் நற்செயல்களை பாராட்டி பல நற்சான்றிதழ்களும் பதக்கங்களும் பெற்றுள்ளான். குடும்பத்துடன் சமூக சேவகர்- பசுமை நாயகன். மருத்துவர். தி.கோ. நாகேந்திரன் ( கொரோனாவை எதிர்த்து போராடிய முதல் தேசிய போராளி) அவர்களை சந்தித்து நல்லாசி பெற்றனர். உடன் வி .ஆர். ஜோதிபசு இருந்தார்.
மருத்துவர் தி.கோ. நாகேந்திரன் கூறுகையில், ‘நல் விதைகளை தரிசு நிலங்களில் பயிர் செய்யும்போது நாட்டிற்கும் வீட்டிற்கும் பயன் தரும். எனவே அதற்குரிய உரமும் நீரும் பாய்ச்சுவதில் பெற்றோர்களின் பங்களிப்பும் சமுதாயத்தின் பங்களிப்பும் அதிகம். எனவே, நாம் நல்ல நாட்டை உருவாக்க நல்ல விதைகளை பயிரிடுவோமாக. சமுதாய பேரிடர்களில் இருந்து நம்மையும் இந்த விதைகளையும் காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்’ என்று வாழ்த்து கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!