தமிழகம்

மதுரை விமானநிலையத்தில் CISF வீரர்கள் ஹிந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக திரைக்கலைஞர் சித்தார்த் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்து மதுரை விமான நிலையம் உரிய விசாரனை மேற்கொள்ள வேண்டுமென மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் ட்விட்டரில் பதிவு

231views
மதுரை விமான நிலையத்தில் நேற்று பகல் திரைப்பட நடிகர் சித்தார்த் அவர்களின் தாய் தந்தையர் வருகை தந்த போது மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் இந்தியில் பேசி காக்க வைத்ததாக நடிகர் சித்தார்த் பதிவிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன இந்நிலையில் நடிகர் சித்தர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்துக்கு ஆதரவாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் இது குறித்து விமான நிலைய மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்களிடம் விசாரணை செய்ய வேண்டும் என கோரிக்கை ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!