தமிழகம்

ஓய்வில்லாமல் உழைக்கும் பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதா? தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் கண்டனம்

304views
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ஆர். சார்லஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது;
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 02 ஆண்டுகளுக்கும் மேலாக திட்ட இயக்குநராக பணியாற்றிவரும் ஸ்ரீதேவி என்பவர் ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்களையும் பணியாளர்களையும் கொன்று புதைத்துவிடுவேன் என கொலைமிரட்டல் விடுத்துள்ளதற்கு மாநில மையத்தின் சார்பாக கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம். ஏற்கனவே அலுவலர் ஆய்வுக்கூட்டங்களில் வயது வித்தியாசம் இன்றி ஒருமையில் அநாகரீகமாக பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ள இவருக்கு அமைப்பின் சார்பாக பலமுறை அறிவுரை வழங்கிய பிறகும் எதேச்சதிகார,சர்வாதிகார போக்கை தொடர்ந்து கடைபிடிப்பது ஏற்றுக்கொள்ளதக்கதல்ல..
ஊரகவளர்ச்சித்துறை பணியாளர்கள் இரவும் பகலும் ஓய்வின்றி பணி அழுத்தம்,அரசியல் அழுத்தங்களுக்கிடையே பணியாற்றும் சூழலில் அத்தனை விசயங்களையும் அறிந்துகொண்டு தொடர்ச்சியாக அநாகரீக வார்த்தைகள் உதிர்ப்பது இவரின் சீர்குலைந்த மனநிலையை காட்டுகிறது.  சம்மந்தப்பட்ட அலுவலர் தனது கொலைமிரட்டல் செயல்பாட்டுக்கு பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.இல்லை எனில் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் கொலைமிரட்டல் வழக்கு பதிவு செய்ய அமைப்பு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்று தமது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!