தமிழகம்

காட்பாடி அடுத்த ஆரிமுத்துமோட்டூரில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் – அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பு

92views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த ஆரிமுத்து மோட்டூரில் அரசின் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.  மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர் வெங்கடேசன் வரவேற்றார்.  சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட நீர்வளத்துறை அமைச்சர் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அப்பகுதி மக்களுக்கு வழங்கினார்.  மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த், ஊரக திட்ட இயக்குநர் ஆர்த்தி, காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், வட்டார வளர்ச்சிஅலுவலர் நந்தகுமார், வருவாய்துறையினர், ஊரக வளர்ச்சி துறையினர், பயனாளிகள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!