தமிழகம்

கிருஷ்ணகிரி உதவி ஆய்வாளருக்கு அண்ணா பதக்கம்

351views
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 127 தமிழக காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சிறைத்துறை ஊர்க்காவல் படை விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சரிப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ம் நாள் அண்ணா பிறந்தநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த உதவி காவல் உதவி ஆய்வாளர் எஸ். நெளஷாத் நேர்மையான அர்ப்பணிப்பு பணியினை அங்கீகரிக்கும் வகையில் தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கத்தை பெற தேர்வாகி உள்ளார்.  அவருக்கு காவல்துறையை சார்ந்த பலரும் பொதுமக்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
செய்தியாளர் : A. முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!