தமிழகம்

பிரசித்தி பெற்ற குருபகவான் கோவிலுக்கு செல்லும் சாலை என்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

154views
மதுரை மாவட்டம் சோழவந்தானிலிருந்து பிரசித்தி பெற்ற குருவித்துறை குரு பகவான் கோவிலுக்கு செல்லும் பிரதான சாலை மோசமான நிலையில் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் ரோடுகளில் ஆங்காங்கே விபத்தை ஏற்படுத்தக்கூடிய பள்ளம் அதிகம் காணப்படுகிறது.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முறையாக செப்பனிடப்படாத சாலையால் இரவு நேரங்களில் வருவோர் மிகுந்த சிரமத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
குறிப்பாக மன்னாடிமங்கலம் வளைவில் முழங்கால் அளவு பள்ளத்தில் சாக்கடை நீருடன்மழை நீரும் தேங்கி இருப்பதால் சுகாதாரக் கேடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்
பிரசித்தி பெற்ற.குருவித்துறை குருபகவான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி.வருகின்றனர்.
மேலும்.மன்னாடிமங்கலம் ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், புனித அந்தோனியார் ஆலயத்துக்கு வரும் பக்தர்களும் மிகுந்த சிரமத்தில் செய்வதறியாத திகைத்து வருகின்றனர்.
இது குறித்து மன்னாடிமங்கலம் குருவித்துறை கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தோம் இந்த சாலையை செப்பனிட நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இது தொடர்ந்தால் விரைவில் பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த போவதாகவும் கூறுகின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சாலையை சீரமைக்க வேண்டும் என்றும், விபத்து ஏற்படும் முன் சாலையை சரி செய்ய வேண்டும் என்றும் இப்பகுதி சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!