கவிதை

லதா கவிதைகள்

180views

ஆண் சுவாசம்
உலகத்தின் முதல் மனிதனே
குற்றத்தின் முதல் தண்டனையனே
பரிகாரமில்லா முதல் பாவமோ
பரிகாசம் தேடாத முதல் யாசகனோ
விழியால் நேர்ந்த முதல் உயிர்ப்பில்
விழிமூடுவரை கொடுக்கும் முதல் தர்மன்
காதல் விளைவின் முதல் கண்ணீர்
காற்றோடு பேசாத முதல் சுவாசகன்
கலையா ஓவியனின் முதல் கற்பனை
காவிய உலகம் இவன் படைப்பன்றோ..‌‌

ஆண் பூ
எதிர்மறை வாசமோ
எதிரியில்லா சுவாசமோ
ஏகாந்த மகரந்தமோ இவன்…
எவர் நிலையறிய
தன்னிலை மாற்றினானோ
சமநிலை தேடிய சமாதானப் பூவாக…
சந்ததி தொடுக்கும் பூச்சரத்தில்
சங்கதி இவன் பூந்தென்றலோ..
சர்வமும் இவன் கைப்பாவையோ …
ஆண்ப்பூ தேடலில்
ஆளுமை தேடா இடமுண்டோ…
அகிலத்தின் ரகசியம் இவனன்றோ…
லதா
சிவகாசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!