19views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
தீபாவளியும் ஓணமும் ஒன்றா…
தசராவும் ஹோலியும் ஒன்றா…
கதகளியும் பரதமும் ஒன்றா…
குச்சுப்பிடியும் ஒடிசியும் ஒன்றா..
உன் அப்பனும் மாமனும் ஒன்றா…
தவமும் சவமும் ஒன்றா…
தியாகங்களைக் கொண்டு
நிலை நிறுத்தப்பட்டவை
இஸ்லாமியப் பண்டிகைகள்…
இறைவனுக்காக நோன்பிருத்தல்
சுகாதாரக் கேடா…
உலகெல்லாம் உணவளக்கும்
அமிர்தசுரபி ரமலான்
சுற்றுப்புறப் பகையா…
பசித்தவர் வாய்க்கெலாம்
பாலுணவு ஊட்டுவதால்
இந்த மண் மாசுபடுமா…
தங்களை தவமாக்கி…
பாலையைச் சோலையாக்கி
வருவார்க்கெலாம் வற்றாத
ஜம்ஜம்மைப் பாலாக்கி…
உலக சமாதானத்தை உயிராக்கி…
தோலால் நிறத்தால்
இனத்தால் மொழியால்
நீ உண்டாக்கும்
சமூக வேறுபாடுகளைத்
தரைமட்டமாக்கி…
ஒன்றே குலம்
ஒன்றே மக்கள்
ஒன்றே இறையெனும்
இறைப்பண்பாடி…
இறைவன் முன்
தங்களை அர்ப்பணிக்கின்ற
திருவிழாவையா
தீங்கு என்கிறாய் மடையனே…
உண்டது போக
எஞ்சியதை எல்லாம்
உலக மக்களுக்கு
பகிர்ந்தளிக்கும்
இந்த பரோபகார
உதவியா உன் பாழும் கண்களில்
பாழாய்த் தெரிகிறது…
ஆடு மாடுகள்
உலகப் பொருளாதாரப் பொருட்கள்…
விற்றால் வணிகம்…
குடித்தால் பால்…
உண்டால் பசிக்குணவு …
அதன் மலமும் சலமும் மண்ணுக்கெரு..
தோல் உனக்கு ஆடை…
கொஞ்சம் சொல்…
இதனால் என்ன கேடு..
ஆற்று நீர் மாசா…
வானம் கருக்கும்
வண்ண மத்தாப்புப்
புகை மண்டலமா…
மக்கள் கண்ணெரிச்சலால்
கறுப்படிக்கிறதா…
வெடி வெடித்து
விபத்துக்கள் நிகழ்கிறதா…
புனித நதிகளில்
மனிதப் பிணங்கள்
மிதக்கிறதா…
சொல் மடையனே
இதனால் எங்கே ஏற்படுகிறது
சுகாதாரக் கேடு….
சிந்திக்கவே மாட்டாயா…?
add a comment