பிரம்மா படைப்புக் கடவுள்
மகா விஷ்ணு காக்கும் கடவுள்
சிவன் முக்தி கொடுக்கும் கடவுள்
தர்மங்கள் சிதையும்போது
அவதாரம் எடுப்பேன் என்றான்
கண்ணன் கீதையில்!
கலியுகத்தில் தர்மம் இல்லை!
பாவங்கள் நிரம்பிப் பெருக்கெடுக்கின்றன
பொய்,வஞ்சகம்,சூது , திருட்டு
என்று எதிலும் குறைவில்லை!
தலைவிரித்தாடுகிறது அதர்மம்!
கடவுள் நம்பிக்கையும் காலாவதியாகும்
இந்தக் காலத்தில்—-
கொரானா வடிவில் ஒரு அவதாரம்!
இதன் வடிவைக் காணும்போது
ருத்திராக்ஷம் நினைவு நிழலாடுகிறது!
சிவபெருமானின் ஆபரணம்!
இந்த வடிவில் ஒரு ருத்ர தாண்டவம்!
ஏழை,பணக்காரன் வேறுபாடு இதற்கில்லை!
இந்த மரண ஓலத்திலும் கொள்ளையடிக்க
இதயமற்ற ஒரு கூட்டம்! பாவத்தின் உச்சம்!
இந்த நிலை நாளைக்கு உனக்கும் வரலாம்
என்கிற நினைவேயில்லை!
பணவெறி கண்களைக் குருடாக்குகிறது!
ருத்ர தாண்டவம் அரங்கேறிவிட்டது!
உயிர்கொல்லி கொரானா வடிவில்!
இந்தப் போரில் அப்பாவி அரவான்களும்
களபலியாகின்றனரே என்பதுதான்வேதனை!
இது எங்கே? எப்போது முடியும்?
என்கிற கவலையோடுசெய்வதறியாமல்
காத்திருக்கிறான் பாமரன்!
பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு கோவையைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்....
மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் சென்ற பயணிகளுக்கு நீர்,மோர் தர்பூசணி பழங்களை கொண்டு சென்று ஒவ்வொரு பேருந்தாக ஏறி ஏறி கோடை வெயிலுக்கு குளிர்ச்சியா...
RAYRISES என்பது ஆவணப்படங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி, அம்சங்கள் மற்றும் சர்வதேச தயாரிப்புகளுக்காக முழுமையாக காப்பீடு செய்யப்பட்ட முழு-சேவை தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும். தேசிய வர்த்தக இடங்கள்...
கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.