தமிழகம்

சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாளை முன்னிட்டு ராஜபாளையத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மதிமுக எம்எல்ஏ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும், இளைஞர் பண்பாட்டு கழகத்தினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

72views
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே என். புதூரில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 264 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.  இதனை ஒட்டி ஊரின் மத்தியில் அமைந்துள்ள அவரது சிலை மின் விளக்கு மற்றும் மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் பண்பாட்டு கழகம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  இதனைத் தொடர்ந்து அதிமுக, திமுக, அமமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக சார்பில் சாத்தூர் எம்எல்ஏ டாக்டர் ரகுராமன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!