தமிழகம்

காட்பாடியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி

87views
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் இராமதாஸ் பிறந்தநாள் முன்னிட்டு மற்றும்  வேலூர் கிழக்கு மாவட்ட துணைசெயலாளர் இரா.துளசிராமன் பிறந்தநாள் முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கல் மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய இணை அமைச்சர் என்.டி.சண்முகம், பாமக மாவட்ட செயலாளர் கே.எல்.இளவழகன், சத்தியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.  துளசிராமனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கட்சியினர் அவருக்கு சால்வை அணிவித்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!