தமிழகம்

காட்பாடி அருகே கடன்தொல்லையால் ரயில் முன் பாய்ந்து கணவன் -மனைவி தற்கொலை

124views
வேலூர் மாவட்டம்  குடியாத்தம் அடுத்த அலங்காநல்லூர் கிராமத்தை சேர்ந்த மோகன்(50), மனைவி மல்லிகா (47). இவர்கள் விவசாய தொழில் செய்துவருகின்றனர்.  பல்வேறு காரணங்களுக்காக இவர்கள் கடன் வாங்கி உள்ளனர்.  கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு உள்ளனர். இதனால் கணவன்-மனைவி இருவரும் கடும் மன உளச்சலில் இருந்து உள்ளனர்.
இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த நிலையில் சம்பவத்தன்று லத்தேரி – காவனூர் ரயில்வே பாதையில் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து உள்ளனர்.  இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் வழக்குபதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!