தமிழகம்

காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மத்திய வருமான வரித்துறை சார்பில் பஞ். தலைவருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்

56views
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்(பிடிஓ) வட்டாரத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கு வேலூரில் உள்ள இந்திய வருமானவரித்துறை சார்பில் அலுவலர்கள் மத்திய அரசின் வருமானவரி குறித்து விரிவான தகவல் சொல்லப்பட்டது.  மத்திய அரசுக்கு செலுத்த (டிடிஎஸ்) வேண்டியவருமான அளவு, எந்த அளவில் செலுத்தப்பட வேண்டும், கால அளவு எவ்வளவு?  வரிச்சலுகைகள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கமாக கூறப்பட்டது.  பஞ்சாயத்து தலைவர், செயலாளர்களின் கேள்விக்கு அலுவலர்கள் பதில் அளித்தனர்.

வேலூர் மத்திய வருமானவரித்துறை அலுவலர் தயாராம் தலைமை தாங்கினார். வருமானவரித்துறை ஆய்வாளர், அலுவலர், உதவியாளர், காட்பாடி வட்டார வளர்ச்சிஅலுவலர்கள், நந்தகுமார், பெருமாள் உள்ளிட்ட அலுவலர்கள் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!