தமிழகம்

காட்பாடி அருகே பரிதாபம், குடிநீர் தொட்டி பள்ளத்தில் தவறி விழுந்து அக்கா, தம்பி பரிதாபம்

76views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வேலம்பட்டு கிராமம் கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்(40) இவருக்கு ப்ரியா என்ற மனைவியும். பிரித்தி (10) ரபிஸ்வரன்(5) என்ற மகனும் உள்ளனர். கோடைவிடுமுறையில் வீட்டில் உள்ளனர். தற்போது வசிக்கும் வீட்டின் பின்புறம் புதிய வீடுகட்ட, தண்ணீர் சேமிக்க 7 அடி ஆழத்தில் 2 பள்ளங்களை வெட்டி இருந்தார். மழையின் காரணமாக பள்ளத்தில் நீர் நிரம்பி இருந்தது.நேற்று முன்தினம் மாலை பிரித்தி,ரபிஸ்வரன் ஆகியோர் விளையாடிக்கொண்டு இருந்தபோது பள்ளத்தில் தவறி விழுந்து இறந்து உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த லத்தேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். அக்கா. தங்கை இறந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!