தமிழகம்

காட்பாடியில் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வீரவணக்கம் நினைவு நாள் !

17views
தமிழகம் முழுவதும் கடந்த 1987-ம் ஆண்டு வன்னியர்களுக்கு அரசு வேலையில் இடை ஒதுக்கீடு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 21 வன்னிய மக்கள் இறந்தனர். அதனை நினைவுகூரும் வகையில் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் 21- பேரின் படத்திற்குமாலை அணிவித்து காட்பாடி ஒன்றிய பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் வீர வணக்கம் செய்தனர்.  இதில் வேலூர் பாமக மாவட்ட செயலாளர் இளவழகன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் சண்முகம், மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் துளசிராமன், மேற்கு ஒன்றிய தலைவர் முனுசாமி, மகளிர் அணி செயலாளர் வசந்த் ப்ரியா, மாணவர் அணி செயலாளர் நவீன்குமார், இளைஞர் அணி நவீன்குமார், மற்றும் வன்னியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!