தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் போதை ஊசி விற்பனை 2 வாலிபர்கள் கைது !

24views
வேலூர் அடுத்த காட்பாடி திருவள்ளுவர் நகர் , சின்னபள்ளிக்குப்பம் ரோடு பகுதியில் சிலர் போதை ஊசி தயாரித்து பயன்படுத்துவதாக காட்பாடி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது, அதன் அடிப்படையில் அப்பகுதியில் காவல் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டதில் 2 வாலிபர்களை சுற்றி வளைத்து கைது செய்து தொடர்ந்து அவர்களிடம் காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் அணைக்கட்டு தாலுக்கா ஒதியத்தூர் அடுத்த ராஜபுரம் பகுதியை சேர்ந்த லட்சுமிகாந்த் ( 26 ) வேலூர் கொசப்பேட்டை யை சேர்ந்தபரத் ( 28) என்பது தெரியவந்தது மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போதை ஊசிக்கு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட 69 மாத்திரைகள் 5 சிரஞ்சுகள் ஊசி போட மருந்து கலக்கும் பிளாஸ்டிக் கப் உள்ளிட்டவைகளை காவல்துறையினர் கைப்பற்றி பின் கைது செய்தனர் போதை ஊசி தயாரித்த இவர்கள் பயன்படுத்துவது மட்டுமின்றி இவர்களை தேடிவரும் கல்லூரி , பல்கலைக்கழக மாணவர்கள், நண்பர்களுக்கு போதை ஊசி விற்பனை செய்து, வந்தது தெரியவந்துள்ளது தொடர்ந்து 2 பேரை காட்பாடி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!