தமிழகம்

காட்பாடியில் ஏரியில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு – வேதனையில் மனைவியும் கிணற்றில் குதித்து உயிரிழந்தார்

65views
வேலூர் மாவட்டம் காட்பாடி ஏரி முனைப்பகுதியை சேர்ந்தவர் ரஞ்சன் (36) இவரின் மனைவி இளவரசி (34). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.  கடந்த 11-ம் தேதி நண்பர்களுடன் அருகில் உள்ள ஏரியில் குளிக்க நண்பர்களுடன் ரஞ்சன் சென்றார்.  அப்போது நண்பர்கள் ஏரிக்கரையை நீந்தி தொடும்படி போட்டி வைத்தனர். ஆனால் ரஞ்சித்தால் தொடர்ந்து நீந்த முடியவில்லை, இதனால் நீரில் மூழ்கினார்.
இதனால் பதறிப்போனவர்கள் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் உடலை மீட்க முடியவில்லை. 2 நாள் கழித்து உடல் நீரில் மிதந்தது.  இதனால் மன உளைச்சலில் இருந்த மனைவி இளவரசி, ஊருக்கு அருகில் சம்பவத்தன்று இரவு கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து காட்பாடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
கணவன் இறந்த சோகத்தில் மனைவியும் தற்கொலை செய்துகொண்டது குடும்பத்தாரிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  தாய், தந்தை உயிரிழப்பால் 2 மகன்களின் நிலைமை மிகவும் பரிதாப நிலையில் உள்ளது.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!