தமிழகம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் அஇஅதிமுக கழகம் சார்பில் விடியா திமுக அரசை கண்டித்து வடக்கு மற்றும் தெற்கு நகர கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

95views
ராஜபாளையம் பொன்விழா மைதானம் பகுதியில் அஇஅதிமுக சார்பில் வடக்கு நகர கழக செயலாளர் வக்கீல் துரை முருகேசன் தலைமையில் விடியா திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை கழக செயலாளர் கிருஷ்ணராஜ் மற்றும் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நவரத்தினம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் குருசாமி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். சொத்துவரி உயர்வு, பால் விலைஉயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து விடியா தி மு க அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அதிமுக சார்பில் ஜவகர் மைதானம் பகுதியில் நடைபெற்ற தெற்கு நகர கழக செயலாளர் பரமசிவம் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!