தமிழகம்

காட்பாடி விருதம்பட்டில் கருணாநிதி பிறந்தநாள் கொடியேற்று நிகழ்ச்சி

159views
வேலூர் அடுத்த காட்பாடி விருதம்பட்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்த முன்னிட்டு கட்சி கொடி ஏற்றி ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  நிகழ்ச்சிக்கு வேலூர் மாநகராட்சி 15-வது திமுக வட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக வேலுர் மாவட்ட திமுக பொருளாளர் நரசிம்மன், மாநகர துணை செயலாளர் தேவநேசன் கலந்துகொண்டு கட்சி கொடியேற்றி படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.  பகுதி துணை செயலாளர் குட்டி, ஏசுபாதம், அசேன், மகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!