தமிழகம்

கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி; முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு

61views
கடையநல்லூர் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நோன்பு பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி காயிதே மில்லத் சேவை குழு அரங்கத்தில் நகரத் தலைவர் பி.ஏ. செய்யது மசூது தலைமையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு நல்லாசிரியர் கே.எம். செய்யது மசூது, கடையநல்லூர் தொகுதி அமைப்பாளர் எஸ்.ஏ. ஹைதர் அலி, நகரத் துணைத் தலைவர்கள் ஜே.கே. செய்யது இமாம், முஹம்மது இஸ்மாயில், நகர்மன்ற உறுப்பினர்கள் என்.எஸ். அக்பர் அலி, ஏ.ஏ. முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.எஸ். அப்துல் மஜீத் ஆலீம் கிராஅத் ஓதினார். நகரச் செயலாளர் பி.பி. அயூப் கான் அனைவரையும் வரவேற்றார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில அமைப்பு செயலாளர் நெல்லை மஜித், கடையநல்லூர் நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், தென்காசி மாவட்ட அரசு ஹாஜி ஏ.ஒய். முஹ்யித்தீன் ஹஜ்ரத், முஸ்லிம் லீக் மாவட்ட துணைத் தலைவர் தென்காசி அப்துல் அஜீஸ், மாவட்டத் துணைச் செயலாளர் புளியங்குடி அப்துல் வஹாப், முஸ்லிம் யூத் லீக் மாநில துணைத்தலைவர் எஸ்.கே.எம். ஹபிபுல்லா, திமுக மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் அமுதம் இஸ்மாயில், புளியங்குடி முகமது இப்ராஹிம் ஆலீம் ஆகியோர் உரை நிகழ்த்தினர். நிகழ்ச்சியில் கடையநல்லூர் தொழில் அதிபர் செய்யது இப்ராஹிம்,பி.எஸ். அதாவுல்லா ஆலிம், எழுத்தாளர் சேயன் இப்ராஹிம், மாவட்ட துணைத் தலைவர் தீ. கலீல் ரகுமான், புளியங்குடி நகர தலைவர் இ.மை. அப்துல் ரகுமான், நகரச் செயலாளர் மு. சேக் காதர் மைதீன், நகர பொருளாளர் கொ.இ. முகமது அப்துல் காதர் துணைச் செயலாளர் எஸ். முகமது உசேன், கடையநல்லூர் நகர கௌரவ ஆலோசகர் எம்.ஏ செய்யது இஸ்மாயில், எஸ்.ஏ.மீரான், யு.கே. முஹம்மது துராப்ஷா, ஹிந்தி மசூது, அண்ணாவி மஜீத், மூத்த பத்திரிகையாளர் புளியங்குடி சாகுல் ஹமீது, புளியங்குடி நகர் யூத் லீக் தலைவர் ஆடிட்டர் மைதீன் பிச்சை, முகமது அபுபக்கர் சித்தீக் உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில் நகரப் பொருளாளர் கே.கே. திவான் மைதீன் நன்றி கூறினார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!