தமிழகம்

திருமங்கலம் அருகே நீதிமன்ற உத்தரவின் பேரில், ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் தகர்ப்பு – ஆக்கிரமிப்பின் போது பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி, தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

116views
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வீரப்பட்டி கிராமத்தில் , அரசு நிலத்தை பல்வேறு தரப்பினர் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி 10 ஆண்டுகளுக்கு மேலாகி , சட்ட விரோதத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் , அக்கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி அம்மாள் என்பவர் , அரசு இடத்தில் கட்டிடங்களை ஆக்கிரமித்து பொதுப் பாதைக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி , நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த வழக்கின் தீர்ப்பில் , மதுரை நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற திருமங்கலம் வட்டாட்சியர் சிவராம் என்பவருக்கு உத்தரவிட்டதன் பேரில்,  இன்று (28-11-2022 ) வீரப்பட்டி கிராமத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் , வருவாய்த் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் தகர்த்தனர்.

இதனிடையே ஆக்கிரமிப்பாளர்களில் ஒருவரான பெண் , தனது வீட்டினுள் மண்ணெ ண்ணெய் – யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது . பல ஆண்டுகளாக இதனை கட்டி பயன்படுத்த வரும் நிலையில், முன்னறிவிப்பின்றி ஆக்கிரமிப்பு அகற்றுவதை கண்டித்து இச்செயலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!