தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே, இளம்பெண்ணை கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

106views
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள காடனேரி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (27). கூலித் தொழிலாளியான இவர் கடந்த 2017ம் ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணை, மடவார் வளாகம் சுடுகாட்டு பகுதியில் வைத்து கழுத்தை அறுத்து படுகொலை செய்தார். சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலைய போலீசார், தங்கராஜை கைது செய்தனர். இது குறித்த வழக்கு திருவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள், கொலை குற்றவாளி தங்கராஜிற்கு ஆயுள் தண்டனையும், 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!