தமிழகம்

ஆடுதுறை பிரைமரி சார்பில் ரூபாய் 1 இலட்சம் வயநாடு நிவாரண நிதி

17views
கடந்த மாதம் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களின் மறுவாழ்விற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தஞ்சை வடக்கு மாவட்டம், ஆடுதுறை பிரைமரி சார்பில் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களிடம் முதன்மை துணைத் தலைவரும் தமிழ் நாடு வக்ஃப் வாரிய தலைவருமான அண்ணன் அப்துல் ரஹ்மான் அவர்கள் மற்றும் சமுதாய புரவலர் நோபுள் மரைன் ஷாஹுல் ஹமீது அவர்கள் முன்னிலையில் இன்று (29-08-2024) வழங்கப்பட்டது.
மாநில செயலாளர் ஆடுதுறை ஷாஜஹான், மாநில துணைச் செயலாளர் ஜமால் முஹம்மது இப்ராஹிம், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் முஹம்மது சுல்தான், மாணவரணி மாநில செயலாளர் ஷபீக் அகமது ஆகியோர் வழங்கினர்.
மாநில துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான் ரப்பானி, மாணவரணி தேசிய பொதுச் செயலாளர் அர்சத், மாநில இளைஞரணி அமைப்புக்குழு உறுப்பினர் அஹமது, அமீரக காயிதே மில்லத் பேரவை துணை தலைவர் தாஹா, தலைமை நிலைய பேச்சாளர் லால்பேட்டை சல்மான், மணிச்சுடர் நிருபர் சாகுல் ஹமீது உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!