விளையாட்டு

IPL 2022: ‘மேக்ஸ்வெல் உட்பட ஆஸி வீரர்கள்’…ஐபிஎலில் இத்தனை நாள்வரை பங்கேற்க மாட்டார்கள்: நிர்வாகம் அறிவிப்பு!

55views

ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தான் சென்று தலா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு போட்டி கொண்ட டி20 தொடர் நடைபெறும். இத்தொடர்கள் மார்ச் 4 முதல் ஏப்ரல் 5ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.

ஐபிஎல் தொடர் மார்ச் 27ஆம் தேதி துவங்கவுள்ளதால், பாகிஸ்தான் தொடரில் பங்கேற்கவுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள், ஐபிஎலில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய நிர்வாகி, “பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறந்த அணியைத் தான் களமிறக்குவோம். அதில் எவ்வித சமரசமும் இல்லை. இதனால், ஏப்ரல் 6ஆம் தேதிவரை சில முக்கிய ஆஸ்திரேலிய வீரர்கள், ஐபிஎல் தொடரில் பங்கேற்க வாய்ப்பில்லை” எனக் கூறினார்.

இதனால் கிளென் மேக்ஸ்வெல், டேவிட் வார்னர், பாட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் போன்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், ஏப்ரல் 6ஆம் தேதிவரை ஐபிஎலில் பங்கேற்க மாட்டார்கள் என்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.

ஐபிஎலில் பங்கேற்கவுள்ள 13 ஆஸ்திரேலிய வீரர்கள்:

பாட் கம்மின்ஸ் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), மேத்யூ வேட் (குஜராத் டைட்டன்ஸ்), நாதன் கோல்டர்-நைல் (ராஜஸ்தான் ராயல்ஸ்), நாதன் எல்லிஸ் (பஞ்சாப் கிங்ஸ்), ரிலே மெரிடித் (மும்பை இந்தியன்ஸ்), சீன் அபோட் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்), பாட் கம்மின்ஸ் (கொல்கத்தா நைட்) ரைடர்ஸ்), ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் (ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர்), டேனியல் சாம்ஸ் (மும்பை இந்தியன்ஸ்), ஜோஷ் ஹேசில்வுட் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்), மிட்செல் மார்ஷ் (டெல்லி கேபிடல்ஸ்), டேவிட் வார்னர் (டெல்லி கேபிடல்ஸ்), கிளென் மேக்ஸ்வெல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்).

Right Click & View Source is disabled.

error: Content is protected !!