தமிழகம்

ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குவுட்பட்ட 06 ஊராட்சி ஒன்றிய பொறுப்பாளர்கள் செயற்குழு கூட்டம் பேரிகையில் நடைபெற்றது

17views
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சட்டமன்ற தொகுதிக்குவுட்பட்ட கிழக்கு ஒன்றியம் பேரிகை,பி.திம்மசந்திரம்.பி.குருபரப்பள்ளி,கே.எம்.தொட்டி,பேராண்டப்பள்ளி,ஆலூர்,தின்னூர் ஆகிய ஊராட்சிகளின் ஒன்றிய நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் பேரிகையில் நடைபெற்றது.
எதிர்வரும் ஜூன் 14,திருச்சியில், மதச்சார்பின்மை காப்போம். மாபெரும் மக்கள் எழுச்சிப்பேரணி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் தலைமையில் நடைப்பெறயிருப்பதால் அது குறித்து ஒசூர் சட்டமன்ற தொகுதிக்குவுட்பட்ட மேலே குறிப்பிட்ட 6,ஊராட்சிகளுக்கு சேர்ந்த நிர்வாகிகள் ஒன்றிய செயற்குழு கூட்டம் இன்று காலை பேரிகையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில்.
01. ஜூன் 14, திருச்சியில் மதச்சார்பின்மை காப்போம் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணிக்கு மக்களை தயார்படுத்தும் விதமாக முகாம்கள் தோறும் முகாம்,கூட்டங்களை ஒருங்கிணைப்பது
02. வண்டி வாகனங்களை முன்பதிவு செய்வது.
03.முகாம்கள் தோறும் கிராமங்கள் தோறும் களப்பணியாளர்களை நியமிப்பதோடு ஒவ்வொரு முகாமுக்கும் மாநில,மாவட்ட,ஒன்றிய,வார்டு பொறுப்பாளர்களை கொண்ட பேரணி ஒருங்கிணைப்பு குழுக்களை அமைப்பது.
1.விளம்பரக் குழு 2.ஊடகக்குழு 3.வாகனக்குழு  4.மக்களை ஒருங்கிணைக்கும் குழு 5.பிரச்சாரக் குழு
6.மகளிர் குழு 7. உணவு குழு 8. பாதுகாப்பு குழு 9. நிதிக்குழு அமைத்தல் மேலும் பெருந்திரளாக பெண்கள்,ஆண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியில் பங்கேற்பது என்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
இந்த கூட்டம் ஒசூர் சட்டமன்ற தொகுதி மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
வரவேற்புரை கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் பி.நாகராஜ், முன்னிலைகே.ஆர்.சூரியவளவன்.எம்.மாரப்பா.எம்.ராமலிங்கம்.என்.சந்திரன்.புட்டராஜ்.விஜயகுமார்.சீனிவாசன்.கே.எம்.நாகராஜ்.கிருஷ்ணப்பா.தோப்பைய்யா.முனிஎல்லப்பா.அப்பைய்யப்பா. வெங்கடேஷ்‌மகளிரணிபொறுப்பாளர்கள்ராஜேஸ்வரி ரத்தனம்மா.எல்லம்மா.முனிரத்தனம்மா.ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : A. முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!