தமிழகம்

கெங்கவல்லியில் தேனீக்கள் கொட்டியதால் பொதுமக்கள் காயம்

65views
கெங்கவல்லி ஆத்தூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் தேனீக்கள் கூடு கட்டி உள்ளது நேற்று மதியம் அந்த வழியாக சென்ற வாலிபர்கள் தேன் கூட்டின் மீது கல் வீசினார்கள். இதனால் தேனீக்கள் கூட்டமாக அவ்வழியாக சென்ற பொது மக்களை கொட்டியது. இதனால் காயமடைந்த முப்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வெங்கடேசன் (52) ஆனந்த் (32) முத்து (30) மணிகண்டன் (42) சக்திவேல் (53) உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட்டது. தகவல் அறிந்த கெங்கவல்லி பேரூராட்சி தலைவர் லோகாம்பாள் மற்றும் கெங்கவல்லி பேரூர் செயலாளர் பாலமுருகன் சிகிச்சை பெற்றவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
பின்னர் கெங்கவல்லி தீயணைப்பு துறை அலுவலர் பெரியசாமி தலைமையில் தேன்கூடு அழிக்கப்பட்டது.
செய்தியாளர் : ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!