தமிழகம்

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆட்சேர்ப்பு; மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

192views
தென்காசி அரசு மருத்துவமனையில் தரவு மேலாளர் மற்றும் பாதுகாவலர் பணிக்கான ஆட்கள் சேர்க்கப்பட உள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள 1 தரவு மேலாளர் மற்றும் 2 பாதுகாவலர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளார்கள். மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட கல்வித் தகுதியினை பெற்றிருக்க வேண்டும். தரவு மேலாளர் பணியிடத்திற்கான கல்வித்தகுதி விவரங்கள் தென்காசி மாவட்ட வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் பாதுகாவலன் பணியிடத்திற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவங்கள் தென்காசி மாவட்ட வலைதளம் https: //tenkasi.nic.in/notice_category/recruitment/-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் 03.05.2023 அன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ, தபால் மூலமாகவோ துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், (மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம்), தென்காசி – 627 811 என்ற அலுவலக முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். மாலை 5 மணிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட  ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!