தமிழகம்

எருதுவிடும் திருவிழாவில் மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தவர் உயிரிழந்தார்.

72views
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் சாமுடி வட்டத்தில் நடந்த எருதுவிடும் திருவிழாவிற்கு வந்த அச்சமங்கலம் பழனி வட்டத்தை சேர்ந்த குசேலன் என்பவரின் மகன் விக்ரம் (17) என்பவரை மாடு முட்டியதில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.  விக்ரம் சென்னையில் உள்ள ஒரு பூரிக் கடையில் வேலை செய்துவிட்டு தனது சொந்த ஊருக்கு வந்து எருதுவிடும் விழாவிற்கு வந்தபோது இந்த துயர சம்பவம் நடந்தது.  திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கரபாண்டியன், இறந்த விக்ரம் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!