தமிழகம்

மதுரை திருமங்கலம் அருகே அழகிய நிலையில் முட்புதருக்குள் கிடந்த ஆண் சடலம்-போலீசார் விசாரணை

78views
மதுரை திருமங்கலம் விமான நிலையம் செல்லும் சாலையில் தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் பின்புற முட்புதரில் இருசக்கர வாகனம் 2 நாட்களுக்கு மேலாக நின்று கொண்டிருக்கிறது என அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் முட்புதருக்குள் ஆய்வு செய்தபோது உடல் ஒன்று அழுகிய நிலையில் 36 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்றை கண்டெடுத்தனர்.
அத்துடன் சடலத்திற்கு அருகே மதுபாட்டில் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் கிடப்பதை பார்த்த காவல்துறையினர் இவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து சடலத்தை கைப்பற்றிய, பிரேத பரிசோதனைக்காக சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து விசாரணையில் இறந்தவர் திருமங்கலத்தை அடுத்த பேரையூரில் வசிக்கும் பாஸ்கர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இவர் சிவகங்கை அருகே உள்ள அரசுமேல்நிலைப் பள்ளியில் கணினி ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என்பது தெரிய வந்தது தொடர்ந்து வாலிபர் இறப்பு குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!