தமிழகம்

மதுரையில் நள்ளிரவில் சாலையில் நின்று கொண்டிருந்த பசுமாட்டை கடத்தி செல்லும் மர்மகும்பல் – போலீசார் விசாரணை

121views
மதுரை விளங்குடி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெருவில் நின்று கொண்டிருந்த பசு மாட்டை மூன்று பேர் கொண்ட கும்பல் மினி வேனில் கடத்தி செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இந்த நிலையில் கடத்தி செல்லப்பட்ட மாட்டின் உரிமையார் மதுரை கூடல்புதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து பசுமாட்டை கடத்தி சென்ற மர்ம கும்பல் குறித்து போலீசார் திவீர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் பாசு மாடு மற்றும் செல்லபிராணிகளை கடத்தி செல்லும் கும்பல்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!