தமிழகம்

தேனி மாவட்டம் கடமலை மயிலாடும்பாறை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு

57views
தேனி மாவட்டம் கடமலை மயிலாடும்பாறை ஒன்றியத்தில் பிரிட்டிஷார் ஆட்சி காலத்தில் பட்டா வழங்கிய இடத்தில் குடியிருப்போர் தனிநபர் செல்வாக்கால் வீடுகளை இடித்து துன்புறுத்தி வருவதாக இன்று ( 28-11-2022 ) தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்று அளித்தனர்.
அந்த மனுவில் 70 ஆண்டு காலமாக அந்த இடத்தில் தாங்கள் குடியிருந்து வருவதாகவும் தற்பொழுது அந்த இடத்திற்கான வீட்டு வரி மின் கட்டண வரி செலுத்துவதாகவும் வீட்டை இடித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்று அளித்தனர்.
உரிய நடவடிக்கை எடுத்து வீட்டை மீட்டு தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிகழ்வில் கடமலை மயிலாடும்பாறை பொதுமக்கள் 30 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!